BREAKING NEWS

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி வரவேற்புரையாற்றி தொகுத்து வழங்கினார்.

 

மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலீல் மற்றும் எஸ்.டி.பி.ஐகட்சியின் மாவட்ட,தொகுதி, நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அபுல் கலாம் ஆசாத், இமாம் பீர் முகம்மது ஆலீம்,திமுக அம்பை ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய சேர்மன் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகர் மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், திமுக நகர் மன்ற கவுன்சிலர்கள் குட்டி கணேசன், முத்துராமலிங்கம் தளவாய், அருள்மணி, ராமலட்சுமி, கௌஹர் ஜான், விக்னேஷ், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் முருகேசன்,

 

 

அதிமுக நகர செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், தற்போதைய ஒன்றிய செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் இசக்கி ராஜன், அனைத்து சமுதாய பேரவை நிறுவனர் கனக சுப்பிரமணியன், அனைத்து சமுதாய பேரவை தலைவர் முருகன்,

 

ஜனதா தள கட்சி நிர்வாகி ராஜேஷ்வரன், மதிமுக கட்சி நகரச் செயலாளர் பெரியசாமி, பல்சமய கூட்டமைப்பு நிர்வாகி ஞான ஜெபமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வள்ளுவராஜ், ஸ்டாலின் கோபி கல்யாணி மற்றும் ஜமாத்தார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக நகர செயற்குழு உறுப்பினர் பாலாஜி நன்றி உரையாற்றினார்.

CATEGORIES
TAGS