BREAKING NEWS

ஆத்தூர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

ஆத்தூர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

சேலம் மாவட்டம்
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ராசிபுரம் பிரிவு ரோடு பகுதியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீ சொக்கலப்பன் கோவிலில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெள்ளி செவ்வாய் அன்று சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம், இதனையடுத்து இன்று காலை கோவிலில் சுவாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் சென்றபோது அங்கு வளாகத்திற்குள் பாம்பு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டனர் பின்னர்,ஆத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் பாம்புகளைப் பெற்றுக்கொண்ட வனத்துறையினர் ஐயங்கரடு காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்,


கோவில் வளாகத்திற்குள் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )