செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் அதிமுக செந்துறை வடக்கு ஒன்றியத்தின் சார்பாக ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் நேற்று ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி , இளநீர், வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரகாசன், பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர், இலைக்கடம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.