தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் கொரோனா 4வது அலை எச்சரிக்கை !

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது இதனால் பல உயிரிழப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் போன்ற வேகமாக பரவ கூடிய வைரஸ் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியது.

இதனை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 25 மெகா தடுப்பூசி முகாம் நடந்தது முடிந்துள்ளது. இதில் பலர் பயனடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா 4வது அலை தமிழகத்தில் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
