தலைப்பு செய்திகள்
காவல்துறை தடியடியால் ரத்தக்களறியான வெள்ளலூர்!

இதன்படி வெள்ளலூர் பேரூராட்சி சிறப்பு தேர்தல் அலுவலர்களாக இளங்கோவன், கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இன்று மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக பேரூராட்சி அலுவலகத்திற்கு திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வந்தபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் காயமடைந்தார். இதனால் அவர் சாலையில் அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, காவல்துறை வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீஸார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் பார்த்திபன், ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் வெள்ளலூரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
