தலைப்பு செய்திகள்
ஆம்புலன்ஸ் தர மறுப்பு: மகளின் உடலை 10 கிமீ தூரம் சுமந்து சென்ற தந்தை.
சத்தீஸ்கரில் நடந்த சோகம்.

சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையில் இறந்த மகளின் உடலை 10 கிமீ தூரம் தந்தை தோளிலேயே சுமந்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா. சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமி சுரேகாவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார் ஈஸ்வர் தாஸ். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேகா உயிரிழந்தார். இதையடுத்து, மகளின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் ஈஸ்வர் தாஸ் கேட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized
