BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் கொடுமை.

திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் கொடுமை – வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தளுதாளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிராஜ்குமார் (38) . லாரி ஓட்டுனர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 14வயதிற்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ரவிராஜ்குமார் லாரி ஓட்டுனராக வேலை செய்துவரும் நிலையில் இவரது மூத்த மகள் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக பருவம் அடைந்தார்.

இந்நிலையில் ரவிராஜ்குமார் மது அருந்தும் போதெல்லாம் தனது மனைவியிடம் அந்த விஷயத்திற்கு துன்புறுத்துவாராம். மனைவி மறுத்த நிலையில்
14வயதான தன் மகள் என்றும் பாராமல் அந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பலமுறை பாலியல் வன்மம் செய்துள்ளார்.

இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது தனது மகளின் அழும் சத்தம் கேட்டு பார்த்தபோது தன் கணவர் தனது மகளுடன் தகாத உறவு வைத்துள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். தனது மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்ததையடுத்து வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்ததின் பேரில் போலீசார் ரவிராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )