தலைப்பு செய்திகள்
ஆணவ கொலையால் ஆயுள் தண்டனை !
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர் அவர்களை முழுமையாக விசாரணை செய்து பார்த்ததில் குற்றவாளிகள் அவர்கள் தான் என தெரியவந்தது.
இதன் பிறகு பல ஆண்டுகள் நடந்த விசாரணையில் இரு தினங்களுக்கு முன்பு குற்றங்கள் செய்தவர்கள் தான் என நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு நீதிபதி தண்டனை பற்றிய தகவலை மார்ச் 8ஆம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார் அதேபோல் இன்று முதலாவது குற்றவாளியான யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என அறிவித்தார்.
மற்ற அனைவருக்கும் ஒரு ஆயுள் தண்டனை 2 ஆயுள் தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கினார். பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
CATEGORIES Uncategorized