தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (31). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
கிருஷ்ணன் தனது மாடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்து வரும் கனமழையினால் தோட்டத்தில் விவசாய பணிக்காக மண்ணுக் அடியில் பதித்துக் கொண்டு சென்ற வயர்களில் இருந்து மின்சாரம் பாய்ந்தது மாடு மேய்க்க சென்ற கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் அவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மாடும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
இதனை அறிந்த அருகில் உள்ள தோட்டத்தில் வேலை ஈடுபட்டவர்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனை எடுத்து இறந்த கிருஷ்ணன் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இறந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல காவல் துறை அதிகாரிகள் முற்படுகையில் உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் .
பின்னர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை பின்பு உடலை கைப்பற்றி தேனி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .