BREAKING NEWS

தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை

தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு எடப்பாடியில் இருந்து தேவூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது செட்டிபட்டி சந்தப்பேட்டை என்ற இடத்தில் அவருக்கு பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த எடப்பாடி தாலுகா இருப்பாளி மேல் அக்கரை பட்டியைச் சேர்ந்த அழகேசன் (38) என்பவர் மீது தேவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பாபு விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அழகேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Share this…

CATEGORIES
TAGS