BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை அதிக அளவு விலை உயர்வை அடுத்து தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் எஸ்டிடியூ கட்சியின் தொழிற் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராத்திரி சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் தமிழக அரசே . உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக அரசால் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணமாக மினிமம் ரூ .25 , கிலோமீட்டருக்கு ரூ12 என்று நிர்ணயம் செய்தது. அப்போதைய பெட்ரோல் டீசல் விலை பெட்ரோலுக்கு ரூ .54ம் டீசல்க்கு ரூ36ம் இருந்தது . தொழிற்சங்கங்களால் மீட்டர்கட்டணத்தை உயர்த்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . அதன்பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று 2018 ல் ‘ உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியது. ஆனால் இன்றுவரை ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்தவே இல்லை.

தற்போதைய சூழலில் பெட்ரோல் 111 ரூபாயும் , டீசல் 103 ரூபாயும் விற்பனையாகின்றது மேலும், வாகன இன்சூரன்ஸ் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் வாகன புதுப்பித்தல் கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது ஆட்டோக்கள் இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அரசு மினிமம் 40 ரூபாயும் கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும் நிர்ணயித்து கொடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )