மாவட்ட செய்திகள்
கோடி முனையில் மாபெரும் புற்றுநோய் திரையிடல் முகாம்.

இதில் ஸ்ரீ மூகாம்பிகா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவ நிபுணர் செல்வி.கெளபத் மற்றும் சக செவிலியர்களுடன் இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை ஒருங்கிணைத்தவர்கள் நாஞ்சில் கத்தோலிக்க கலை கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் R. அஜய் மற்றும் S. பிரபுதாஸ். முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் பங்குதந்தை அருள்சீலன் (கோடி முனை), ஊர் துணை தலைவர் சார்லஸ், பொருளாளர் சுரேஷ், ரோடரி கிளப் செயலர் வழக்கறிஞர் திரு.ஆன்டுஸ் ஜெரோம் மற்றும் கேட்டார் சமூக சேவை சங்கம் இயக்குநர் தந்தை மைக்கேல் ராஜ், ஒருங்கிணைப்பாளர் திருமதி .T.அமலசரண்யா மற்றும் நாஞ்சில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசியர் Dr.S.பொன்னி. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
