மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம்.



உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம் வந்துள்ளது. தளி கிராமத்தில் இருந்து திரு மூர்த்தி நகர் செல்லும் சாலையில் நடந்து சென்ற யானைகள் கூட்டம் அங்குள்ள மா மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் அங்குள்ள பிஏபி கோட்ரஸ் பகுதியில் சுற்றித் திரிந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந் நிலையில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக சென்று யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
