மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே நள்ளிரவில் வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவியிடம் இருந்து தாலிச்செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே நள்ளிரவில் வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவியிடம் இருந்து தாலிச்செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே செண்பகபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில்இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த கண்ணன், ராஜலட்சுமி மர்ம நபர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒருவன் தான் வைத்திருந்த அரிவாளால் மூன்று இடங்களில் கண்ணனை வெட்டினான். மற்றொருவன் ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்தான். தொடர்ந்து மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த கண்ணனை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
