மாவட்ட செய்திகள்
1 முதல் 8 ஆம் வகுப்பிற்கு இன்று விடுமுறை !

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது மேலும் அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது அதேபோல் இன்னும் மூன்று மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளும் எப்போதும் போன்று நடைபெறும் எனவும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
CATEGORIES மயிலாடுதுறை
