மாவட்ட செய்திகள்
புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.


நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் திமுக தனது அறிக்கையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வோம் என அறிவித்தது.
ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடினம் என்றும் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற வகையில் அறிவித்ததை தொடர்ந்து அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் வாயில் முன்பு நீதிமன்ற ஊழியர்கள் தமிழக அரசு உடனடியாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
