BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை வனச் சரகம் சார்பில் உலக வன நாள் விழா.

உடுமலை வனச் சரகம் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உடுமலையை அடுத்துள்ள ஜல்லிபட்டி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கே.கணேஷ்ராம் தலைமை வகித்தார். பேரணி ஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு வீதிகளில் சென்று பள்ளியை அடைந்தது. உலக வன நாள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. வனச் சரக அலுவலர் சிவக்குமார், பாரஸ்டர் சுப்பையன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )