மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

நாகர்கோவில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த நிலையில் நாகர்கோவில் இடலாக்குடி பள்ளி தெருவில் ஒரு வீட்டில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் அந்த வீட்டில் சென்று சோதனை செய்தபோது அங்கு 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது இதுகுறித்து கோட்டார் போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டிற்கு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர் அந்த அரிசி நாகர்கோவிலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
