BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் தனியார் உணவகத்தில் செல்போனை திருடிச் சென்ற ஸ்விக்கி ஊழியர்.

திருப்பூரில் தனியார் உணவகத்தில் செல்போனை திருடிச் சென்ற ஸ்விக்கி ஊழியர் – சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் கே பி என் காலனி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பெற்றுச் செல்ல வந்த ஸ்விக்கி ஊழியர் அங்கிருந்த மேசையில் இருந்த செல்போனை யாருக்கும் தெரியாமல் லாவகமாக எடுத்த செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்போன் திருட்டு தொடர்பான புகார் காவல் நிலையத்தில் இதுவரை வழங்காத நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )