மாவட்ட செய்திகள்
`இங்கே வாங்க, தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்’- தலைமை காவலரின் மனிதநேயம்.
கடலூரில் நெரிசல் மிக்க சாலைகளில் நல்ல வெயில் நேரத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சியைப் போக்க தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் அங்கு பணியிலிருக்கும் போக்குவரத்துக் காவலர் மணிகண்ணனிடம் கேட்கலாம். அவரது இரு சக்கர வாகனத்தில் 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் தயாராக இருக்கிறது. அவரிடம் கேட்டும் குடிக்கலாம், அல்லது கேட்காமலும் குடிக்கலாம். மக்கள் குடிப்பதற்காகவே அது வைக்கப்பட்டிருக்கிறது.
நெடுஞ்சாலையில் கடும் வெயிலில், நெரிசலான போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்குவது என்பது இருபது ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய விஷயம். இப்போது உணவகங்கள் டீக்கடைகளில்கூட குடிநீர் வைப்பதில்லை. அனைத்தும் பாட்டில்கள் ஆகிவிட்டதால் அதற்காக தனியாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக கிடைப்பதை சாத்தியமாக்கி இருக்கிறார் தலைமைக் காவலர் மணிகண்ணன்.