மாவட்ட செய்திகள்
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் இன்று மாலை தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

தமிழகத்தின் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முரளிதரன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார் மனுவில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அறிவியல் உலகில் தமிழகத்திற்கும் பாரத நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் கல்வி தகவல் தொழில்நுட்பம் மருத்துவம் புவியியல் ஆராய்ச்சி மூலம் விவசாய மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
மேதகு அப்துல் கலாம் ஆதரித்த இத்திட்டம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழலியல் போராளிகள் எனும் பெயரில் அறிவியல் வளர்ச்சியை தடுப்பு மீது நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
