ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
![ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.](https://aramseithigal.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-15-at-16.23.01.jpeg)
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு பல்வேறு மூலிகை திரவங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் கோவில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர் அதனை தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி உலா சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகுகளை குத்தி தொங்கியபடி வீதி வீதியாக சென்று தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.இதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை திரளானோர் கலந்து கொண்டனர்.