வேலூர் அருகே செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மாணவன் தற்கொலைபோலீசார் விசாரணை

வேலூர் அருகே செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி கீதா, மகன் தாமு (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

தந்தை வசந்த் குமார் உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வந்த தாமு எந்த நேரமும் செல்போன் மூலம் பிரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தொடர்ந்து தாமுவை எச்சரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் கீதா திட்டியதாக கூறப்படுகிறது.
கோபித்துக் கொண்ட மாணவன் தாமு தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார் சென்று அவர் இரவு ஒரு மணி ஆகியும் மகன் வராததால் தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்தபொழுது அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேலூர் தாலுகா போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூற்வு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
