BREAKING NEWS

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

2000 நபர்களுக்கு அன்னதானத்தை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

அம்பத்தூர் அடுத்த பாடி பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம்
அமைந்துள்ளது.

ஆடிமாத 43ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் உமா மோகன் தலைமையில்
பாடி சிவன் ஆலயத்தில் இருந்து 1008 பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் ஏந்தி
மேளதாளம் முழங்க ஓம் சக்தி பராசக்தி என்ற மந்திரம் முழங்கி அம்மன் ஆலயத்தை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து
பக்தர்கள் அலகு குத்துதல் தீச்சட்டி ஏத்துதல் என தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்,இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என கோஷம்
முழங்கினர்.

மேலும் கோவிலில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு சுமார் 2000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, இதனை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்து உணவு பரிமாறினார்

Share this…

CATEGORIES
TAGS