அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம்,
வாணியம்பாடி, அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழக நிறுவன டாக்டர் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் A.M.கார்த்திகேயன் தலைமையில் முப்பெரும் விழா.!
இவ்விழாவில் 2000ம் பழம்வகை பூ மரக்கன்றுகள் அம்பலூர் ஊராட்சியில் பல பகுதியில் மரக்கன்றுகள நடவு செய்து அரசு மேல்நிலைப்பள்ளி 10.11.12 ஆம் . வகுப்பு 150 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் எழுத்துப் பொருட்கள் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்கள் T.சாமுடி மாவட்ட கவுன்சிலர் அவர்கள் அம்பலூர் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் மதியம் 12 மணிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் குழந்தையின் நலனுக்காக பள்ளியின் தரை அமைப்பதற்கு 8 லட்சம் ரூபாய் சொந்த செலவில் டைல்ஸ் அம்பலூர் ஆரம்பப் பள்ளிக்கு அமைத்து தருவதாக விழாவில் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் 70 மாணவர் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பொருட்கள் வழங்கினார்.
உடன் சத்திராஜா செந்தில்குமார் நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் அம்பலூர். A.A.அசோகன் சமூக ஆர்வலர். அம்பலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தேசிய குற்ற விசாரணை கழகத்தின் சார்பாக மதிய உணவு குழந்தைகளுக்கு பரிமாறினார். மற்றும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழகத்தைச் சார்ந்தவர்கள் அ.மா.கார்த்திகேயன்,
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் R.திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் G.விஜயகுமாரி, மாவட்ட மகளிர் செயலாளர் U.சுதாகர். அ.அருண்குமார் ஆலங்காயம் ஒன்றிய செயலாளர். ஏற்பாடு செய்தவர்கள் A.A.பாலகிருஷ்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றிய இணைச் செயலாளர் A.P.கோபிநாதன்., நாட்றம்பள்ளி ஒன்றிய இணைச் செயலாளர்அ.து.புகழேந்தி அம்பலூர் கிராமச் செயலாளர். கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.