BREAKING NEWS

அம்மாபேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் பாபு  சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார் 

அம்மாபேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் பாபு  சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார் 

 

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில்  கத்திரி நத்தம் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து  தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து  ராராமுத்திரகோட்டை, சாலியமங்களம், அருமலக் கோட்டை, அருந்தவபுரம், கருப்புமுதலியார்கோட்டை அம்மாபேட்டை, உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து  வேட்பாளர் பாபு இரட்டை இலை   சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது மாற்று திறனாளி ஒருவருக்கு சால்வை அணிவித்து வாக்கு கேட்டார். கிராமப்புறங்களில் வேட்பாளர் பாபுவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS