BREAKING NEWS

அரக்கோணம் அருகே சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம்

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் குளக்கரையில் ஸ்ரீ சுயம்பு லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும், திரிபுர சுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஊர் கோவிலில் இருந்து மணமகள் திரிபுர சுந்தரி அழைப்பு நடைபெற்றது. அப்போது கிராமப் பெண்கள் சீர்வரிசை தட்டுடன் மேளதாளங்கள் முழங்க திரிபுரசுந்தரி அம்மனை மயில் வாகனத்தில் அமர வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் சுயம்பு லிங்கேஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பிகைக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது .
இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.https://youtu.be/XnqtUT5SFks

Share this…

CATEGORIES
TAGS