BREAKING NEWS

அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.

அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் சார்பில் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் மைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன அதில் உழுபவனுக்கு நிலம் உழைப்பவருக்கு அதிகாரம் வேண்டும், வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த விவசாயிகளுக்கான குறைந்த ஆதார விலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து பல கிராமங்களுக்கு செல்லும் கால்வாய்களை தூர்வாரி விரிவுபடுத்த வேண்டும்.என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

CATEGORIES
TAGS