BREAKING NEWS

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணி சாமி அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் தடம் எண்-45 பேருந்தில் கலைக் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு , பேருந்தில் ரகளை செய்ததால் பேருந்து விபத்து ஏற்படும் என்று நடத்துனர், ஓட்டுநர் பேருந்தை மாநில நெடுஞ்சாலையில் நிறுத்திவிட்டனர்.

இதனால் மாணவர்கள் பேருந்த இயக்க கோரி நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். எங்களுக்கு மாற்றுப் பேருந்து வேண்டுமென்று மாநில நெடுஞ்சாலையில் நின்று கொண்டு மாணவர்கள் ரகலையில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உடனடியாக அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை கண்டவுடன் சாலையில் நடுவில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் தெறித்து ஓடினார்கள். நிற்கவைக்கப்பட்ட அரசு பேருந்து போலீசாரின் பேச்சுவார்த்தை தொடர்ந்து மீண்டும் இயக்கப்பட்டது .

மேலும் மாற்று பேருந்தும் உடனடியாக வந்ததால் அந்த பேருந்திலும் மாணவர்கள் ஏரி கல்லூரிக்கு சென்றனர்.மாநில நெடுஞ்சாலையில் ரகலையில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 30 நிமிடத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS