BREAKING NEWS

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது..

 

இந்த நிதியாண்டில் 75ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.. அம்பத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தகவல்

சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 – 2025ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த புதிய மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து அட்டை உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பேருந்து அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி, தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட குறும்படத்தையும் வெளியிட்டார். மேலும், 1.25 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தையும் அமைச்சர் சி.வி. கணேசன் திறந்துவைத்தார். உடன் துறை செயலாளர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடையே பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில்,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. அதன் படி, கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2700 பேரில், 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திந்த அமைச்சர் சி.வி கணேசன் கூறுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி புத்துணர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். அதன் படி வந்தது தான் நான் முதல்வன் திட்டம். மார்ச் 1ம் தேதி இத்திட்டத்தின் இணையதள பக்கம் துவக்கப்பட்டது. அனைத்து விவரங்களும் அதில் சிறப்பாக குறிப்பிடபட்டிருக்கிறது. இந்த 2024 – 2025ம் நிதியாண்டில் 75ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்திரவாதம் அளித்திருக்கிறார். இந்தியாவில் உற்பத்தி துறையில் பணியாற்ற கூடிய பெண்களின் எண்ணிக்கையில் 42 சதவிகித பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் தாயுமானவராக மாறியிருக்கிறார் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS