அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் ஒரே நாளில் ஐந்து கோவில்களுக்கு கும்பாபிஷேகம், கிருஸ்துவ பாதிரியார்கள் பங்கேற்பு, ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நடுவலூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் ஐயனார்கோவில் என ஐந்து கோவில்கள் அப்பகுதி மக்களால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. இதனையடுத்து அருள்மிகு ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன், வீரனார் மற்றும் ஐயனார் கோயில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மேல் நெல் பூக்கள் நவதானியங்களும் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது இதில் கிராம நாட்டாண்மைகள்,
மண்டகபடி வகையறாவினர்,நடுவலூர் ஜல்லிக்கட்டு பேரவை, மத நல்லிணக்கமாக கிருஸ்துவ பள்ளி பாதிரியார்கள் ராபர்ட், ஜோசப் தன்ராஜ் உட்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து கோவில் கும்பாபிஷேகத்தில் கிருஸ்வர்கள் கலத்து கொண்டது மத நல்லிணக்கத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையும் காட்டுகிறது
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழாகுழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது .