BREAKING NEWS

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.நான்கு மாட் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வீடு தோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனர்..

CATEGORIES
TAGS