BREAKING NEWS

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்…

சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கிருத்திகை முன்னிட்டு மூலவரும் உற்சவ மூர்த்தியான சுப்பிரமணி சுவாமி,வள்ளி ,தேவசேனா சுவாமிக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.மங்கள வாத்தியங்கள் முழங்க கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருத்திகை சிறப்பு பூஜையில் பானாவரம், நெமிலி, சோளிங்கர் , காவேரிப்பாக்கம் ,மகேந்திர வாடி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்….

CATEGORIES
TAGS