BREAKING NEWS

ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடைராயன் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து பிரயோகம் கோ பூஜை அனுக்ஜை கலா கர்ஷணம் கனநாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முதல் கால வேள்வி தொடங்கப்பட்டு மகாபூர்ண ஹுதி யாத்ரா தானம் நடைபெற்றது.

 

 

தொடர்ச்சியாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன தொடர்ச்சியாக வேள்வி சாலையில் இருந்து பட்டாசு சத்தங்கள் விண்ணை பிளக்க மங்கல இசையுடன் நாதஸ்வரம் இசைக்க மங்கள பரிவாரங்களுடன் புனித தீர்த்த கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கருட பகவான் வானத்தில் வட்டமடிக்க புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்பொழுது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி பரவச நிலையை அடைந்தனர் பின்னர் புனித தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது விழா குழுவினர் மற்றும் ஊர் நாட்டாண்மைகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு அங்காளம்மனின் அருள் ஆசி பெற்று சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS