BREAKING NEWS

ஆர்.கே.நகரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தேனி தொகுதி மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். டிடிவி.தினகரன் பிரசாரம்.

ஆர்.கே.நகரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தேனி தொகுதி மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். டிடிவி.தினகரன் பிரசாரம்.

 

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்துலாபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி அப்பிபட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பெரியகுளம் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட நான், 14 வருட வன வாசத்திற்கு பிறகு மீண்டும் தற்போது தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தன்னை அந்த தொகுதி மக்கள் மாபெரும் வெற்றி பெறச் செய்தனர். கொள்ளையடித்த பணத்தை அந்த தேர்தலில் செலவழித்த எடப்பாடி பழனிச்சாமி டெபாசிட் கூட வாங்க வில்லை.‌ திமுக தோல்வி அடைந்தது. என் மீது நம்பிக்கை வைத்த ஆர்.கே‌நகர் மக்கள் மாபெரும் வெற்றி பெறச் செய்ததை போல, தற்போது தேறிய குக்கர் சின்னத்தில் போட்டியிடும் உங்கள் வீட்டுப் பிள்ளையான என்னை தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அப்போது மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வரும் மோடியிடம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல நமது தேனி தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றுத் தருவேன் எனக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இரட்டை இலை சின்னம் தற்போது பி.எஸ்.வீரப்பா, நம்பியார் போன்ற எடப்பாடி பழனிச்சாமி கையில் இருக்கிறது. அதனை தற்போது ஒன்றாக இணைந்துள்ள நானும், ஓ.பி.எஸ்-ம் மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்போம் என்று பேசினார்.

CATEGORIES
TAGS