BREAKING NEWS

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு – திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு – திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி.

 

கோவை சாய்பாபா காலனியை பகுதியை சேர்ந்தவர் கோவை தங்கம். இவர் 14.1.1949 அன்று பிறந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

மகன் விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் சத்யா தொழிலதிபராக இருந்து வருகிறார். போவை தங்கம் 1969 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் இருந்துள்ளார்.

 

 

அதன் பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகவும் பணியாற்றி வந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை வால்பாறை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,

 

அதேபோல, 2006 இல் இருந்து 2011 வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் 2019 இல் இருந்து 2021 பிப்ரவரி வரை தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார். பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி திமுகவில் இணைந்தார்.

 

15 நாட்களுக்கு முன்பு தொண்டையில் சிறிய புண் ஏற்பட்டுள்ளதால் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

 

 

இதனை அடுத்து திமுக தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

1965 ஆம் ஆண்டு மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறைந்த கோவைதங்கம் உடலுக்கு, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் கோவை தங்கம் வீட்டிற்கு வந்து, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )