ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை சரி செய்யப்பட்டது.
கருங்கல்பாளையம் செல்லும் வழியான கந்தசாமி வீதியில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டிருந்தது.
இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாயக்குழியினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அறிந்த மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில்குமாரின் வேண்டுகோளின்படி மாநகராட்சி நிர்வாகம் விரைந்து வந்து சாலையை சரி செய்தனர்.இதனால் வாகன ஓட்டிகளின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்குஈரோடு மாவட்டம்தமிழ்நாடுமாவட்ட செய்திகள்