BREAKING NEWS

ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமை அட்டையை வழங்கிய அமைச்சர்

ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வார் ரூம் கட்டளை மைய திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு நடைபெற்று.

மணல்மேடு திமுக அலுவலகத்தில் முன் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு முன்னிலையில்
150க்கும் மேற்பட்ட வறுமையில் வாடும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமைத்தினை மணல்மேடு திமுக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொருளாதாரப் பிரச்சினையில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS