BREAKING NEWS

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஈரோட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து வந்த நிலையில் ஈரோடு மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வீரப்பன் சத்திரத்தில் பெய்த மழையின் காரணமாக சாலையிலேயே மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS