BREAKING NEWS

உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை

உலக சிறுநீரக தினமாக மார்ச் 14ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது இதனை முன்னிட்டு இன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்த்து 10 நாட்கள் தீவிர கண்கானிப்பில் வைக்கும் சிகிச்சை மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முருகதாஸ் சண்முகம், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சகுந்தலா, மருத்துவமனையின் இயக்குனர் ரஷ்மி, மற்றும் சிறுநீரக மருத்துவர் பிரபாகரன், வழக்கறிஞர் நவமணி ராசு, ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் முருகதாஸ் சண்முகம் கூறுகையில்..
இன்று திறக்க பட்ட இம்மையத்தில் உடல் உறுப்பு தானம் பெற்ற பின்னர் அவர்களுக்கு பொருத்த பட்ட உடல் உறுப்புகள் இயங்குகின்றதா, உடலில் என்னேன்ன மாற்றங்கள் உள்ளது என்பதை கண்காணிக்கும் ஐசியு பிரிவு துவங்கபட்டுள்ளது என்றார். இரு முறைகளில் உடல் உறுப்புகள் தானம் பெறலாம் எனவும், ஒன்று குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது.

 

அடுத்தது தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து, உங்களுக்கான உடல் உறுப்புகளை பெறுவது, இதில் இரண்டாவது முறையில் பெறுவதற்கு தற்போது 43 ஆயிரம் பேர் தற்போது விண்ணப்பித்து உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதிற்க்கு காலதாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததுதான். தற்போது முளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்குபவர்களின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு முன்வந்து நடத்தி வருகின்றது. எனவே பொதுமக்கள் உடல் உறுப்புகள் தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS