BREAKING NEWS

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

 

 

 

 

 

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை மற்றும் சாரல் மழை காரணமாக கடந்த வாரங்களில் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் வார விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது …

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கர்நாடக பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று உதகையில் உள்ள சுற்றுலா தளங்களில் மழை இல்லாமல் இதமான காலநிலை நிலவி வருவது காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக உதகையில் உள்ள கர்நாடகா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள், மலர் அருவி, தொங்கு பாலம் ஆகியவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்ததோடு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

CATEGORIES
TAGS