BREAKING NEWS

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசுகையில்.

மகளிர்களுக்கு இளைஞர்களுக்கு உழவர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாய பழகுடியினர் சமுதாய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு சென்று என்று பாரதத்தை ஒரு உலகின் உன்னதமான ஒரு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மேலும் இந்தியா கூட்டணியின் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறோம் ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் குடும்ப அரசியல் கட்சியாகவும் ஊழல் செய்யும் காட்சிகள் ஆகும் கட்டப்பஞ்சாயத்துகள் செய்யும் கட்சிகளாகவும் உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் அப்துல்லா காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல் லல்லு பிரசாத் மாட்டு தீவன ஊழல் அகிலேஷ் யாதவ் லேப்டாப் ஊழல் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் திமுக கருணாநிதி குடும்பம் வருமான வரி குற்றச்சாட்டு என அனைத்து கட்சிகளுமே ஊழல் கட்சிகளாக உள்ளது காங்கிரஸ் கட்சியில் உள்ள சோனியா ராகுல் சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பல தலைவர்களும் தற்பொழுது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பெயிலில் உள்ளனர்.

இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற கூட்டணியாக உள்ளது கரூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

CATEGORIES
TAGS