ஓமலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி!
ஓமலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி!
சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பாக போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து பேசினார். இதனைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார்.
ஓமலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இப்பேரணியில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போதை விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியும், கோசமிட்டுவாரும் பேருந்து நிலையம்,தருமபுரி சாலை, கடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.