கரூரில் கடும் வெயிலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மலர் தூவி வரவேற்ற மழலையர்கள்

கரூரில் கடும் வெயிலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மலர் தூவி வரவேற்ற மழலையர்கள் .
கரூர் மாவட்டம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் திமுக அமைச்சர் பெருமக்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதற்கட்டமாக கோடங்கிபட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் .முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திமுக கரூர் பொறுப்பாளர் எம்பி அப்துல்லா கலந்து கொண்டார்.
தாந்தோணி கிழக்கு ஒன்றியம், புலியூர் பேரூராட்சி தாந்தோணி மேற்கு ஒன்றியம், உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில்
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்து அப்பகுதி பொதுமக்கள் ஆலத்தி எடுத்து மழலையர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
அப்பொழுது வேட்பாளர் செல்வி ஜோதிமணி எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சியில் நிறைவேற்றி உள்ளது.
இம்முறையும் இந்தியா கூட்டணி சார்பில் .காங்கிரஸ் கட்சி கரூர் வேட்பாளராக மீண்டும் கை சின்னத்தில் போட்டியிடுகிறேன் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்
உடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவர் திவ்யா கனகராஜ் இந்தியா கூட்டணி தோழமைக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.