BREAKING NEWS

கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டிற்கு எதிராக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுக, எம்.எல்.ஏ, எம்.பிக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட அவை தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CATEGORIES
TAGS