கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்
ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கலைஞரின் 101 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று காலை கரூர் மாவட்ட திமுகவின் சார்பில் கரூர் வெண்ணமலையில் உள்ள அன்பு கரங்கள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்.
மேலும் திமுக சார்பில் வெங்கமேடு. மற்றும் கரூர் பஸ் நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுகவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட கிளை ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.