BREAKING NEWS

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. இந்த சாலை பசுபதி பாளையம், நெரூர், வாங்கல் மற்றும் மோகனூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் திடீரென இச்சாலையில் சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இந்த சாலைகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கனமழை காரணமாகவும், இந்த சாலையில் பாதாள சாக்கடை செல்வதாலும் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதே பகுதியில், ஏற்கனவே இரண்டு முறை இதுபோல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்திற்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் ஏற்பட்ட பள்ளத்தால் வேலை முடிந்து வீடு திரும்பவும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES
TAGS