BREAKING NEWS

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை… சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை… சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

 

மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி அருகே இந்திலி ஆர்கேஎஸ் தனியார் கல்லூரி வளாகத்தில், கல்லூரிச் சந்தை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கல்லூரிச் சந்தையை தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
இன்று தொடங்கிய கல்லூரி சந்தை, இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கல்லூரி தொழில் முனைவோர் குழு இணைந்து, கல்லூரி சந்தையை நடத்துகிறது.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்று, அரங்குகளில் அலங்கார நகைகள், உணவு வகைகள், சேலைகள், சத்து மாவு வகைகள் மற்றும் செடி வகைகள் உள்ளிட்டவற்றைவிற்பனைக்கு வைத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS