BREAKING NEWS

காட்டுமன்னார்கோயிலில் கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

காட்டுமன்னார்கோயிலில்  கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஜோதி ஆரஞ்சு விசன் சென்டர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார், பேரூராட்சி மன்ற தலைவர் கணேசன் மூர்த்தி தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார்.

பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சத்திஷ், பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் துரைராஜ், ரோட்டரி சங்க துணை ஆளுநர் ரூபி பாஸ்கர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அறிவழகன், இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பேரூராட்சி மன்றத்தில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS