BREAKING NEWS

காட்பாடியில் அமமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு: என்.ஜி.பார்த்திபன் பங்கேற்பு!

காட்பாடியில் அமமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு: என்.ஜி.பார்த்திபன் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், அமமுக சார்பில் காட்பாடி வடக்கு பகுதி கழகம் சார்பில் காட்பாடி குடியாத்தம் கூட்டுரோடு உழவர் சந்தை அருகில்
காலை 10.00 மணி அளவில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், பப்பாளி பழங்கள், குளிர் பானங்கள் ஆகியவை அடங்கிய தண்ணீர் பந்தலை காட்பாடி வடக்கு பகுதி கழக செயலாளர் எம்.சக்திவேல்
தலைமையில், கழக தேர்தல் பிரிவு செயலாளர், மண்டல பொறுப்பாளரும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், வட்டகழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் ரவி, 5வது வட்ட கழக செயலாளர் கஜேந்திரன், 2வது வட்ட கழக செயலாளர் வெங்கடேசன், பகுதி அவைத்தலைவர் ஜோதீஸ்வரன், 5வது வட்ட பிரதிநிதி எம். கணேசன், 4வது வட்ட பொறுப்பாளர் ரஜினி மற்றும் கழக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS